Ticker

6/recent/ticker-posts

அளவுக்கு அதிகமாக மது அருந்தி உயிரிழந்த தம்பதியர்!


அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்த தம்பதிகள் தொடா்பான சம்பவம் ஒன்று படல்கும்புரவில் இடம்பெற்றுள்ளது.

படல்கும்புர 08ம் கட்டை பகுதியில் வசிக்கும் இந்த தம்பதியினர் 75 மற்றும் 65 வயதுடையவர்கள். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தம்பதியினர் வழக்கம் போல் மது அருந்திவிட்டு கீழே விழுந்ததாகவும், அவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்களது மூத்த மகன் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகவும் அறிய வருகிறது.

இவர்கள் இருவருக்கும் மேலும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளதாகவும், மகள் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து  தினமும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments