போதைப்பொருள் வைத்திருந்த போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, சேதவத்தை புதிய களனி பாலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான சந்தேக நபர், சில காலமாக துப்பாக்கிச் சூடு நடத்துபவராகச் செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
0 Comments