Ticker

6/recent/ticker-posts

குற்றச்சாட்டுகள் எதுவுமே இல்லாத ஒருவரை பொலிஸ் மாஅதிபராக நியமிக்கவும்!


குற்றச்சாட்டுகள் எதுவுமே இல்லாத  ஒருவரை  பொலிஸ் மாஅதிபராக  நியமிக்க வேண்டும் என ராமண்ய பிரிவைச் சேர்ந்த அனுநாயக்க கடம்பே ரஜோவனராமாதிபதி கெப்பெட்டியாகொட சிறிவிமல நாஹிமி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் அற்ற, நாடும் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிப்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸாரின் செயற்பாடுகள் தற்போது அராஜக நிலையை எட்டி வருவது மோசமான முன்னுதாரணமாகும் எனவும் கெப்பெட்டியாகொட சிறிவிமல நாஹிமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் பொலிஸாருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும், பொலிஸாருக்குத் தேவையானது கௌரவமான நிகழ்காலம் ஒன்றே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், என்ன அழுத்தம் வந்தாலும், எந்த குற்றச்சாட்டும் இல்லாத, மக்கள் ஏற்கும் அதிகாரியை, பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு நியமிக்க வேண்டும். வெறும் பிரபலத்தை வைத்து, அதிகாரிகளை இந்த உயர் பதவிக்கு நியமிக்க கூடாது. இந்த பதவியை வெற்றிடமாக விடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என்றும் கூறியுள்ள அவர், இது தொடர்பில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும்  கேட்டுள்ளார்.

Post a Comment

0 Comments