நீண்ட காலமாக சில பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகள் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்றத்தின் பராமரிப்பு பிரிவின் மற்றுமொரு ஊழியர் கடந்த (25) பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர பாராளுமன்றத்தின் பராமரிப்பு பிரிவின் அதிகாரி ஒருவரை அண்மையில் இடைநிறுத்தியிருந்தார்.
குறித்த ஊழியர் அந்த பராமரிப்பு அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உதவியதாக விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து நாடாளுமன்ற பொதுச் செயலாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பெண் அதிகாரிகள் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றது. அதன் அறிக்கை இன்னும் சில நாட்களில் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அறிய வருகிறது.
0 Comments