நீர் இணைப்பொன்றை பெறுவதில் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்துடன் வசிக்கின்ற சில சமுர்த்தி பயனாளர்களை இனங்கண்டு கல்முனை மற்றும் மருதமுனை 65 வீட்டுத்திட்டத்தி்ல் வசிக்கின்ற பயனாளர்களுக்கு நீர் இணைப்புக்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நீர் இணைப்புக்கள் வை.டபிள்யு.எம்.ஏ பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது பவுண்டேஷன் உறுப்பினர்களுடன், குறித்த பயனாளர்கள், பிரதேசவாசிகள, நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments