Ticker

6/recent/ticker-posts

தியவன்னா ஓயவிலிருந்து இடது கை அற்ற நிலையில் மனித சடலம்

நாடாளுமன்றத்தின் பின்புறமாக உள்ள தியவன்னா ஓயவிலிருந்து இடது கை அற்ற நிலையில், மனித சடலம் ஒன்றை காவல்துறையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.

இந்த சடலம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக மிரிஹான காவல்நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அண்மையில் நாவல பிரதேசத்தில் கால்வாயொன்றிலிருந்து இடது கைப்பகுதியொன்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments