இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிலையத் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
சட்டத்தரணிகள் குழு முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 Comments