Ticker

6/recent/ticker-posts

புதுவருடத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதாகவுள்ளனர்!


கடந்த மாதம் நாட்டில் உருவான அரசியல் நெருக்கடி நிலையின் போது  பாராளுமன்றத்தில் உள்ளே அநாகரீகமாக செயற்பட்டு  அரச சொத்துக்களை சேதப்படுத்திய  பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதற்கு  பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவத்தின் போது பாராளுமன்றத்தின் பல இலட்சம் பெறுமதியான உடமைகளுக்கு  சேதம் விளைவிக்கப்பட்டன.  இந்த வன்முறையில்  நேரடியாக சம்பந்தப் பட்டவர்கள் பற்றிய தகவல்கள்   சி.சி.ரி.வி. காட்சிகள் மூலம்  திரட்டப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இது தொடர்பாக  விசாரணை செய்வதற்கு  நியமிக்கப்பட்ட குழுவின்  விசாரணைகள்  இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும்  இன்னும் ஒரு  சில நாட்களில் இந்த அறிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்படவிருக்கிறது.

சம்பவம் இடம்பெற்ற  நாட்களில்  பாராளுமன்றத்தில் இருந்த  ஊடகவியலாளர்கள்  மற்றும் பாராளுமன்ற ஊழியர்களிடமும்  இது தொடர்பாக வாக்கு மூலங்கள் பெறப்படவிருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments