Ticker

6/recent/ticker-posts

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்: பொன்னையன் தகவல்

பொதுக்குழு, செயற்குழுவுக்கு அளப்பரிய அதிகாரம் உண்டு. அதன் அடிப்படையில் விதிகள் தளர்த்தப்பட்டு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொன்னையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரை பொதுக்குழு, செயற்குழு தேர்ந்தெடுக்க வேண்டும். கூடிய விரைவில் புதிய பொதுச் செயலாளரை பொதுக்குழு, செயற்குழு தேர்ந்தெடுக்கும்.
ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், அதிமுக ஆதரவாளர்கள், பொதுமக்கள், பல அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் சசிகலாதான் பொதுச் செயலாளராக வேண்டும் என்று ஏகமனதாக விரும்புகிறார்கள். அதுதான் நிலைப்பாடு.


அதிமுகவின் உயிர்நாடியாக, அச்சாணியாக,ஆணிவேராக இருக்கிறார். ஜெயலலிதாவின் மனசாட்சியாக சசிகலா இருக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக உருவாக்கலாம் என்பதுதான் அதிமுகவின் சட்ட நிலை. தேர்தல் வியூகங்களை வகுத்தவர் சசிகலா. அவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

பொதுக்குழு, செயற்குழுவுக்கு அளப்பரிய அதிகாரம் உண்டு. அதன் அடிப்படையில் விதிகள் தளர்த்தப்பட்டு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்'' என்று பொன்னையன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments