(அஷ்ரப் ஏ சமத்)
தற்பொழுது நடைபெற்று வரும் க.பொ.த. சா.தரப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருக்கும் கொழும்பு, மட்டக்குளியயைச் சோந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனா்.
ஆனால் இதுவரை 5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின்போது மண்டபத்திற்குள் தங்களது தலையில் அணியும் ஹிஜாபை கழற்றி மேசையில் வைத்து விட்டே பரீட்சை எழுதி வருவதாக ஒரு மாணவி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையத்தின் கடமையிலுள்ள பிரதான பரிசோதகரே இதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியதாக கொழும்பு - 15 டிலாசால்ஆண்கள் கல்லுாாியிலேயே பரீட்சைக்கு தோற்றும் சகல முஸ்லீம் மாணவிகளுக்கும் இவ்வாறு தலையை மறைக்கும் ஹிஜாபை கழற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
0 Comments