Ticker

6/recent/ticker-posts

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய்தனர்; நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவிப்பு!

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே படுகொலை செய்ததாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்டீனிடம், குற்ற விசாரணைப் பிரிவு  பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளதுடன், லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது சாரதியை கடத்திய நபர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி அடையாள அணி வகுப்பின் போது சந்தேக நபர்களை அடையாளம் காண்பித்துள்ளார். 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொழும்பின் புறநகர் பகுதியான கல்சிசைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Post a Comment

0 Comments