Ticker

6/recent/ticker-posts

பண மோசடியை மூடி மறைக்க அவதூறு பரப்பும் பவ்சுல் ஹமீட்!

கடந்த வாரம் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலய அதிபர், பெற்றார் ஒருவர் கல்வித் திணைக்களத்திற்கு  செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அவருக்கு எதிராக சேறுபூசும் பிரசார நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பபட்டு வருவதாக அறிய வருகிறது.
பிரபல ஆடை வியாபாரியான பவ்சுல் ஹமீடும், அவரது SSDF அமைப்பின் ஒரு சில அங்கத்தவர்களும் இணைந்து திட்டமிட்ட அடிப்படையில் இந்த அவதூறை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறித்த பாடசாலை அதிபரின் கைதுக்கும் முஜீபுர் றஹ்மானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில், தாருஸ்ஸலாம் பாடசாலையில் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக பவ்சுல் ஹமீடுக்கும் அவரின்  SSDF அமைப்பினருக்கும் முஜீபுர் றஹ்மானோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தியே பவ்சுல் ஹமீட் குழுவினர் இந்த சேறுபூசும்  துர்பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பவ்சுல் ஹமீடின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் தகுந்த ஆதாரங்கள் பெறப்பட்டு இருக்கின்றன.

கொழும்பின் ஐதேக அரசியல் தலைமைத்துவத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவின் அடிவருடி சக்திகள் இந்த பவ்சுல் ஹமீடின் அடாவடித்தனங்களுக்கு  திரைமறைவில் இருந்து உதவி புரிந்தும் வருகின்றனர்.

ஸாஹிரா நிர்வாகத்திலும், பொதுப்பணி என்ற பெயரில் பெர்துமக்களிடமிருந்து திரட்டப்பட்ட பல மில்லியன் ரூபாய் நிதி மோசடிகள் தொடர்பாக எழுந்தள்ள  கேள்விகளுக்கு பதில் வழங்க முடியாமலும், தனது நேர்மையை நிரூபித்துக் கொள்ள முடியாமலும்; தவித்துக்கொண்டிருக்கும்  பவ்சுல் ஹமீடும் அவரது ளுளுனுகு அங்கத்தவர்களும் முஜீபுர் றஹ்மான் மீதான இந்த சேறு பூசும் நடவடிக்கையின் மூலம் மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர்.

இனவாதத்திற்கு எதிரான முஸ்லிம் சமூகத்தின் குரலாய் இருக்கும் பாராளுமன்ற அங்கத்துவத்தை இல்லாதொழிக்கும் இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை மஹிந்தவின் அடிவருடிகளே வடிவமைத்துமுள்ளனர். பவ்சுல் ஹமீடும் அவரின் எஜமானர்களும் விரும்புவது போல, கொழும்பில் ஆதிக்கம் செலுத்தும் ஐதேகவின் அரசியல் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கோ, சிதைப்பதற்கோ  இனவாத மஹிந்தவின்  திருட்டு சக்திகளோடு  கூட்டாளியாகியிருக்கும் எந்த சக்திகளுக்கும் முடியாத காரியமாகும்.

                                                               (அபூ யாஸிர்)

Post a Comment

1 Comments

  1. Dear Mr. Mujeeb,


    Don’t think that we don’t know what your upto. Kind request to please not to tarnish the image of people such as Fouzul Hameed as they are people gifted by God for our community. Think what Zahira was 10 years back what it is today. Just becs you want to gain political benefits and votes you’re trying to stop him helping the Maligawatte people. You will be cursed by Allah. Please stop this cheap political move and stop interfering into Darrusaalam.

    #SaveDarrusalam #Colombo


    Jazakallahu Khair
    Concerned Old Boy

    ReplyDelete