Ticker

6/recent/ticker-posts

வயோதிப பெண்ணைக் கொன்று தங்கத்தை அபகரித்த கொள்ளையா்கள்!


கல்பிட்டி பகுதியில் வீடொன்றில் புகுந்து எழுபத்து மூன்று வயதுடைய பெண்ணை அடித்துக் கொன்று விட்டு,  மூன்று பவுன் தங்க நகை மற்றும் காதணியை  கொள்ளையடித்துச் சென்ற நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்பிட்டி 'பி' முகாம் பகுதியைச் சேர்ந்த கே. ஆமினா என்ற குறித்த வயோதிபப் பெண், வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையா்கள் அவரை கடுமையாக தாக்கி,  அவரின் தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு  தப்பிச் சென்றுள்ளதாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகாயமடைந்த மூதாட்டி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை கடந்த 3ம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு மற்றும் விலா எலும்புகள் உடைந்ததே மரணத்துக்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதாக பொலிஸாா் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கல்பிட்டி பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Post a Comment

0 Comments