Ticker

6/recent/ticker-posts

தடம் புரண்டது பஸ் வண்டி! 19 பேருக்கு காயம்!


நேற்று (5) காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் 11 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 2 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குகின்றனர்.

சாரதி மற்றும் நடத்துனா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments