பாகிஸ்தான் தூதுவா் உமா் பாரூக் புா்கி அவா்களால் புத்தளத்திலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு நேற்று(21) இடம்பெற்றது.
பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கும் மற்றும் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்திற்கும் மேற்படி கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் நவவி உட்பட, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி முகாமையாளா் நுஸ்கி ஆகியோா் கலந்து கொண்டுள்ளனா்.
0 Comments