Ticker

6/recent/ticker-posts

ரத்துபஸ்வல மக்களின் ஆதரவு மைத்திரிக்கு

த்துபஸ்வல “சியனே ஜன நெகும” அமைப்பின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவுக்கு என இன்று அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
திம்பிரிகஸ்யாயவிலுள்ள எதிர்க் கட்சியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
ரத்துபஸ்வல நீர்ப் பிரச்சினைக்கு தலைமை வகித்த தெரிபெஹ சிறிதம்ம தேரர் உட்பட அப்பிரதேச மக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவும் பொது வேட்பாளருக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் கேட்டு பாதைக்கு இறங்கிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட அரசாங்கம் இன்னும் அம்மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வில்லையெனவும் சியனே சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுரேஷ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments