Ticker

6/recent/ticker-posts

கேரளா கஞ்சா கடத்திய சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது!


(FAROOK SIHAN)

250 கிராம் கேரளா கஞ்சாவை  கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை(21)  இரவு விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த  போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை   சந்தேக நபர் கைதானார்.

 இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து  250 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா  விசேட அதிரடிப்படையினரால்   கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் சம்மாந்துறை   பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments