ஒருவாின் தொலைந்து போன “டெபிட் கார்ட்” ஐ பயன் படுத்தி அதில் இருந்து 153,602 ரூபா பெறுமதியான பொருட்களை மோசடி மூலம் வாங்கியதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டெபிட் கார்ட் காணவில்லை என டெபிட் கார்டின் உரிமையாளர் பெந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments