பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானின், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, இந்த தகவலை உறுதிப்படுத்தியாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஆபத்தான நிலையில் அவா் இல்லையென்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கான் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக விசாரணையை தொடங்குமாறு அதிகாரிகளை கேட்டுள்ளார்.
இம்ரான்கான் தோ்தலை நடாத்தக் கோரி பேரணியொன்றை கடந்த அக்டோபர் 28 அன்று லாகூரில் இருந்து தொடங்கியிருந்தார், இந்தப் பேரணி நவம்பர் 11 ம் திகதி இஸ்லாமாபாத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
0 Comments