Ticker

6/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் டிசம்பர் இறுதிக்குள்

( ஐ. ஏ. காதிர் கான்)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை,  இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார். 

வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள்  தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறு ஆய்வு நடவடிக்கைகள்  தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை,  இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள்  திருத்தும் நடவடிக்கைகள்,  இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த விடைத்தாள்கள்  திருத்தும் நடவடிக்கைகள்  இடம்பெறவுள்ளதுடன், முதலாவது  கட்டம் இன்று  முதல் ஜனவரி முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

இடண்டாம் கட்டம், ஜனவரி மாதம் எட்டாம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments