Ticker

6/recent/ticker-posts

மியன்மார் அகதிகள் தாக்குதல் விவகாரம்.. இன்று மாலை மேலும் 4 பேர் கைது.

மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் மற்றும் அகதிகள் மீது அச்சுறுத்தல் மேற்கொண்ட குற்றத்தில் இன்றுமாலை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நேற்றும் இன்றும் பெண் உட்பட இரண்டு பேர் கைதான நிலையில் மேலும் நான்கு பேர் கைதாகியுள்ளனர்.


அதேவேளை நேற்று (29) கைது செய்யப்பட்ட மொரட்டுவையைச் சேர்ந்த டிசான் சமிருவன் ருத்திகு என்பவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி மொஹமட் மிஹால் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments