Ticker

6/recent/ticker-posts

வடமாகாண சபை தவறான பாதையில் செல்கிறது: அமைச்சர் சம்பிக்க

சர்வதேசம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தவறான பாதையிலிருந்து விலகி நாட்டை ஐக்கியப்படுத்தும் வகையில் செயற்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்தலோசித்து அந்த பிரச்சினைகளுக்க தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆட்சி மாற்றத்தின்போது தமிழ் அரசியல் தலைமைகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியமையை வரவேற்பதாக குறிப்பிட்ட அமைச்சர், சமஷ்டி என்ற பெயரில் தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்க முயற்சிக்கும் பிரிவினைவாத பாதைக்கு அரசாங்கம் இடமளிக்காது என குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களை மொழிசார் மாகாணமாகவோ அல்லது இனம்சார் மாகாணமாகவோ பிரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments