Ticker

6/recent/ticker-posts

களையெடுக்கப்பட்ட கருணா

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் முக்கிய பதவிகள் வகித்தவர்களில் மூவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்றுக்குழுவில் எவ்விதமான பதவிகளையும் வழங்காது களையெடுத்துவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் மூவரே இவ்வாறு களையெடுக்கப்பட்டுள்ளனர். 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பத்தரமுல்லையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
 முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வகித்து வந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தேசிய அமைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தார். எனினும், அவருக்கு எந்த பதவியும் வழங்குவதற்கு நேற்றைய கூட்டத்தின் பரிந்துரைக்கப்படவில்லை.
 இதேவேளை, சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சுதந்திரக்கட்சியில் எவ்விதமான முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை.

Post a Comment

0 Comments