Ticker

6/recent/ticker-posts

யாழில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்: வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையில் அல்வாய் பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்த பாழடைந்த வீடு ஒன்றில் குண்டு வெடிக்க செய்யப்பட்டதாகவும் எனினும் அது வாக்களிப்பை பாதிக்கவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை வவுனியாவில் எதிர்ப்பார்த்ததை விட மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மட்டக்களப்பு உட்பட கிழக்கு மாகாணத்திலும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலையில் காலையில் மந்தமாக இருந்த வாக்களிப்பு தற்போது சூடு பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார். மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பிராதான வேட்பாளர்களின் மாவட்டங்களான அம்பாந்தோட்டை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களில் மக்கள் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments