நாட்டில் காலநிலை தொடர்ந்தும் மோசமாக காணப்படின் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் இடம்மாற்றம் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை மோசமான காலநிலை காரணமாக வாக்காளர் அட்டை விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன் இதற்கமைய எதிர்வரும் 4ஆம் திகதி வாக்காளர் அட்டை முழுமையாக
விநியோகம் செய்யப்படுவதுடன் தேர்தல் நடத்துனர் தொடர்பில் எதிர்வரும் 3ம் திகதி மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல் கண்டியில் இடம்பெறவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விநியோகம் செய்யப்படுவதுடன் தேர்தல் நடத்துனர் தொடர்பில் எதிர்வரும் 3ம் திகதி மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல் கண்டியில் இடம்பெறவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் நேற்று தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மோசமான காலநிலை காரணமாக வாக்காளர் அட்டை விநியோகம் மற்றும் ஏனைய பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இருப்பினும் தற்போது காலநிலை சற்று மாற்றம் கண்டுள்ளது.
இதற்கமைய மோசமான காலநிலையில் தேர்தலை எப்படி நடத்துவது தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களையும் ஒன்று கூட்டி எதிர்வரும் 3ம் திகதி கண்டியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
மேலும் மோசமான காலநிலை காரணமாக வாக்காளர் அட்டை விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 4ம் திகதி விசேட தினமாக கொண்டு வாக்காளர் அட்டை விநியோகம் செய்யப்படும். அதேவேளை தற்காலிக அடையாள அட்டை எதிர்வரும் 3ம் திகதி விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் தற்காலிகமாக அடையாள அட்டை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கையை கண்காணிப்பாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் மோசமான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமாயின் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் இடம்மாற்றம் செய்யப்படும். இதன்போது அகதிகளாக தற்காலிக முகாம்களில் உள்ளவர்கள் தனக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தனது வாக்குரிமைகளை பிரயோகம் செய்ய முடியும்.
அத்தோடு அனர்த்தங்களின் போது தனது அடையாள அட்டை இழந்தவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அவற்றை தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னெடுப்பர் என்றார்.
0 Comments