Ticker

6/recent/ticker-posts

அதிக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்ட ஆண்டு 2022!


2022 ஆம் ஆண்டில் 911,689 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டு அதிகளவான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் 529,138 கூடுதல் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2,008,066 ஆக இருந்ததாகவும், அவர்களில் 1,124,022 பேர் இலங்கையர்கள் என்றும் 864,648 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments