எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறும் நான்காவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பின்ஷிப் போட்டி 2022 இல் பங்கேற்கும் இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்கு புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்கள் மூன்று பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனா்.
இலங்கை ஸெபக்தக்ரோ அணிக்குத் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களான சகீ அஹமட் அம்ஜுதீன், அதீப் ஹஸன் மற்றும் அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டை சகோதரா்கள்) ஸாஹிரா தே.க.வின் பழைய மாணவர்களாவர்.
மேற்படி உத்தியோகபூர்வ கடிதம் பார்வைக்கு வழங்கப்பட்டபோது தனது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் பாடசாலை சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்த அதிபர் நஜீப் அவர்கள், மேலதிக ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் பங்களாதேஷ் பயணத்துக்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு பாடசாலை மட்டங்களில் நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகமான Kumpulan Melayu Puttalam முகாமையாளர் சகோதரன் ஷிப்லி மர்ஜான் கலந்துகொண்டார்.
புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபருக்கும், பாடசாலை முகாமைத்துவத்துக்கும் ஆட்ட வீரர்களும் Kumpulan Melayu Puttalam கழக முகாமையாளரும் தமது நன்றியைத் தெரிவித்தார்கள்.
0 Comments