பாணந்துறை பிரபல பாடசாலையொன்றில் தவணை பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பாடசாலை சீருடையில் பியர் குடித்துக் கொண்டிருந் ஐந்து மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பாடசாலை சீருடை அணிந்து கடற்கரையில் பியர் அருந்திக் கொண்டிருந்த 5 மாணவர்களும் பியா் டின்களுடன் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தவணைப் பரீட்சை முடிவடைந்ததையடுத்து, இவா்கள் பாணந்துறை மதுபானக் கடையில் பியர் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களின் பெற்றோரை அழைத்து, அறிவுரைகள் வழங்கப்பட்டு மாணவாகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவாா்கள் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments