Ticker

6/recent/ticker-posts

நிலநடுக்கத்தால் அதிர்ந்த சொலமன் தீவுகள், சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது!


பசிபிக் பெருங்கடலில் உள்ள சொலமன் தீவுகள் அருகே மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, தலைநகர் ஹொனியாராவில் கட்டிடங்கள் குலுங்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொலமன் கடற்கரை பகுதிக்கு உடனடியாக விடுக்கப்பட்ட  சுனாமி எச்சரிக்கை பின்னா் தளர்த்தப்பட்டுள்ளதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. 

7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,  இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, தலைநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வானொலி தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்புகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக கூறப்படுகிறது.

நகரங்களை அண்மித்த பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அப்பகுதியை விட்டு மேட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்வதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments