Ticker

6/recent/ticker-posts

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இதுவரை 268 போ் பலி!


இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று மீட்புக்குழுவினர் கூறுகின்றனர். இறப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளதாக பிபிசி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நிலச்சரிவுகள் கூட ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக குறிப்பிட முடியாது என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை 268  இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் சுமார் 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சியாஞ்சூர் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இது 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவையும் பாதித்துள்ளது.

Post a Comment

0 Comments