Ticker

6/recent/ticker-posts

9ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!


அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கும் எதிராக எதிர்வரும் 9 ஆம் திகதி தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையமும் ஐக்கிய மக்கள் இயக்கமும் இணைந்து கொழும்பில் தேசிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பல்வேறு உடன்படிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில்  அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் விதித்துள்ள பாரியளவிலான வரிகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறாா்கள். மக்களுக்கு  வாழ்வாதார வசதிகளை வழங்க வேண்டிய அரசாங்கம்,   நாட்டை மேலும் கடன் பொறிக்குள் கொண்டு சென்றுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments