டான் பிரியசாத்தின் சகோதரர் ஒருகொடவத்த பாலத்தின் கீழ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ஒருகொடவத்தை மேம்பாலத்தின் கீழ் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்கள், கத்திகள் சகிதம் வந்த ஒரு குழுவினா் குறித்த நபரை தாக்கி கொலை செய்துள்ளனா்.
கொலை செய்யப்பட்டுள்ள நபா், 34 வயதான வெல்லம்பிட்டிய குருணியாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர்.
கொலைக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
0 Comments