Ticker

6/recent/ticker-posts

சஜித் காரணமாக புத்துயிர் பெறும் ஐதேக! கட்சியை விட்டு வெளியேறியோர் மீண்டும் இணைய வாய்ப்பு!

ஐக்கிய  தேசியக் கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் பல்வேறு காலங்களில் ஐதேகவை விட்டு வெளியேறிய கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிய வருகிறது.


அண்மையில்  கட்சியை விட்டு வெளியேறிய  முன்னாள் உறுப்பினர்களை  மீண்டும் கட்சியில் சேருமாறு   சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்த ஐதேகயின் பொதுச் செயலாளர் திஸ்ஸா அத்தநாயக்க ஏற்கனவே ஐக்கிய  தேசியக் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் உபாலி பியாசோமாவும் நேற்று சிறிகோத்தாவில் உள்ள ஐதேக தலைமையகத்திற்கு வந்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுடனும் ஸ்ரீ.ல.சு.க.உடனும் இணைந்திருக்கும் உறுப்பினர்கள்  மீண்டும்  ஐதேகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments