Ticker

6/recent/ticker-posts

விஜேதாஸ ராஜபக்ஷ வெகு விரைவில் குப்பை தொட்டிக்குள் விழுவார் : எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாணசபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு தெரிவித்த நீதி அமைச்சர் வெகு விரைவில் குப்பை தொட்டிக்குள் விழுவாரென வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சுதந்திர கட்சியினர் தாக்க வரும்போது நாமே காப்பாற்றினோம். அன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரின் தாக்குதலை காப்பாற்றியது தவறு.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பலமிக்க அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது விஜயதாஸ ராஜபக்ஷ அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு பலவீனமான எதிர்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவினார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றையடுத்து எழுந்த சர்ச்சையினை அடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயதாஸ ராஜபக்ஷவை தாக்க முற்பட்டனர்.
இதனை நாம் தடுத்து நிறுத்தி காப்பாறினோம். இவ்வாறாக நாங்கள் செயற்பட்ட நிலையில் தற்போது வடக்கு தமிழ் மக்களின் ஆட்சியின் கீழ் உள்ள வட மாகாணசபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு கூறியுள்ளமை கவலைக்குரியது.
இவ்வாறு கூறியிருக்கும் அமைச்சர் குப்பை தொட்டிக்குள் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதேபோல் அன்று இக்கட்டான கால கட்டத்தில் இருந்த தற்போதைய ஆளூநர் றெஜினோல்ட் குரேவை வடக்கிற்கு கொண்டுவந்து பாதுகாத்து ஆயுத பயிற்சி வழங்கினோம். அவ்வாறு ஆயுத பயிற்சி வழங்கியவர் கள் வடமாகாணசபையில் தற்போதும் உள்ளனர்.
இவ்வாறு அன்று அவரை பாதுகாத்தது தற்போது தவறு என உணர்கின்றேன் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (LankaSee)

Post a Comment

0 Comments