Ticker

6/recent/ticker-posts

தாயின் நெஞ்சை கிழித்து "இதயத்தை" வெளியில் எடுத்த மகன்: ஓர் கொடூர சம்பவம்

ஓமர் பெட்டிஜென்
அமெரிக்காவில் பெற்ற தாயை கொலை செய்து அவரது இதயத்தை வெளியே எடுத்த மகனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரிமான்ட் பகுதியை சேர்ந்த நைலா பெட்டிஜென்  Nailah Pettigen (64) என்பவர் முன்னால் கணித போரசிரியை ஆவார்.

இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது மகன் ஓமர் பெட்டிஜெனுடன் Omar Pettigen (31) வசித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று, நைலாவுக்கும் அவரது மகன் ஓமருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, துப்பாக்கியை எடுத்த நைலா தனது மகனிடம் "உன்னை சுட்டுவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓமர், தனது தாயின் கையில் இருந்த துப்பாக்கியை கீழே தட்டிவிட்டு அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், பெற்ற தாய் என்றும் பார்க்காமல் துப்பாக்கியை எடுத்து தனது தாயை நோக்கி நான்கு முறை சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர், கத்தியை எடுத்து தனது தாயாரின் கழுத்திலிருந்து மார்பு பகுதி வரை அறுத்து, இதயத்தை கைகளால் வெளியே எடுத்து போட்டுள்ளார்.
பின்னர், தனது தயாரின் உடலை அந்த இடத்திலேயே போட்டு விட்டு தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார்.
நைலா பெட்டிஜென்
இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற 5 நாட்களுக்கு பிறகு, ஓமரின் தந்தை தனது மகனுக்கு போன் செய்துள்ளார், ஆனால் பதில் எதுவும் கிடைக்காததால் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தததையடுத்து வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிசார், அங்கு கண்ட காட்சியால் திகிலடைந்து போயினர்.
இதனைத் தொடர்ந்து ஓமரை கைது செய்து விசாரணை நடத்தியதில், முழங்கால் மற்றும் இடுப்பு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது தாயார் பெயின் கில்லர் மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டார்.
இதுதொடர்பாக எனக்கும் அவருக்கு நடைபெற்ற பிரச்சனையில் தான் இந்த சம்பவம் நடந்தது என்று வாக்குவாதம் அளித்துள்ளார். world.lankasri.com

Post a Comment

0 Comments