கடந்த செப்டெம்பர் மாதம் மக்காவுக்கு யாத்திரைக்குச் சென்ற இலங்கை பிரஜை ஒருவரின் சடலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரினால், மக்காவிலுள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியிலிருந்து, தனது மனைவியுடன் காணாமல் போயிருந்த நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் இவருடைய மனைவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments