Ticker

6/recent/ticker-posts

ஜனக்கபண்டார தென்னகோனை விசாரிக்க சென்ற கொழும்பு பிரதான நீதவான்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனை விசாரணை செய்வதற்காக, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பெலபிடிய  இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஜனக்க பண்டார தென்னகோனின் உடல்நிலை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறும் நீதவான் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு மாத்தளை தம்புள்கமுவ பகுதியில் இடம்பெற்ற மனித கொலை தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னகோன் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments