Ticker

6/recent/ticker-posts

கேள்வி கேட்ட இளைஞன் மீது பிள்ளையான் தாக்குதல்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை மேடையில் வைத்து கேள்வி கேட்ட இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கலுதாவலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 வயதான குறித்த இளைஞர் மகிந்தவுக்கு ஆதரவான பிரசார மேடையில் வைத்து, மகிந்த இனப்படுகொலைகளை புரிந்துள்ளமை எங்களுக்கு தெரியும். அந்த வகையில் நீங்கள் என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்று பிள்ளையானை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை அடுத்து பிள்ளையான் தமது உதவியாளரான பிரசாந்தனிடம் ஏவி, குறித்த இளைஞரை பிடித்து வாகனம் ஒன்றினுள் வைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Post a Comment

0 Comments