Ticker

6/recent/ticker-posts

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் நோயாளிகளுக்கானஉணவுப் பொருட்களை திருடிய சமையற்காரர்கள்!




மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சசைப் பெறும் நோயாளர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக  வைக்கப்பட்டிருந்த சுமார் 13,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை திருடிய மூன்று சமையற்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் அரிசி, தேங்காய், எண்ணெய் ஆகியன உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு உணவு சமைப்பதற்காக சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த  உலர் உணவு பொருட்கள் திருடு போவது  தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே  இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

.மஹரகம காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அசங்க பத்திரன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments