Ticker

6/recent/ticker-posts

சீனாவிற்கு பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான திட்டம்!


இந்நாட்டில் விளையும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்தும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் சீன அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பல வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திட்டுள்ள போதிலும்,

இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்தி வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் சீன பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பல வகையான வாழைப்பழங்களை தெரிவு செய்து சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாய அமைச்சின் அறிக்கைகளின்படி, இந்த நாட்டில் பயிரிடப்படும் கெவன்டிஷ் வாழை வகைகளும் அன்னாசி, மாம்பழம், ஃபெஷன் (கொடித்தோடை) பழம், புளிவாழை மற்றும் முள் ஆத்தங்காய்ப் பழம் ஆகியவை பல நாடுகளில் பிரபலமாக உள்ளன.

இந்நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் இந்தப் பழங்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ளன.

Post a Comment

0 Comments