Ticker

6/recent/ticker-posts

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் வெளி நாட்டிலிருந்து?


தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் இருந்தே  தொலைபேசி  ஊடாகவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதுவரை, தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாகஅவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments