இந்தோனேசியா அரசாங்கம் வெள்ளிக்கிழமையன்று அனைத்து கோவிட் -19 கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளது.
அந்நாட்டில் கொவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கை சமீபத்திய மாதங்களில் மிகவும் குறைந்துள்ளன.
டெல்டா தொற்று மிக வேகமாக பரவி இந்தோனேசியாவை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெருக்கடிக்குள் தள்ளியது.
இனிமேல் கொவிட் கட்டுப்பாடுகள் இல்லை என ஜனாதிபதி ஜோகோ விடோடோ வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திபபில் கூறியுள்ளாா். உலக சுகாதார அமைப்பின் தரத்தில் இந்தோனேசியாவுக்கான தொற்றுநோய் குறிகாட்டிகள் மிகவும் கீழே உள்ளதாகவும் அவா் கூறியுள்ளார்.
என்றாலும், மக்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்த ஜனாதிபதி ஜோகோ விடோடோ, இனி முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றாலும் முகக்கவசம் அணிவதைத் தொடர்ந்து பின்பற்றும்மாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
0 Comments