முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மோசமான பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி ஏழு வாரங்களுக்குப் பிறகு நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளா்களால் அவா் வரவேற்கப்பட்டதாக ஏஎப்பி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிா்கொண்ட கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு கோட்டாபய மீது குற்றம் சாட்டப்பட்டது.
“கோட்டா வீட்டுக்கு போ” என்ற சுலோகத்துடன் பல மாதங்களாக தொடராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, போராட்டக்காரா்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை கடந்த ஜுலை மாதம் 9ம் திகதி முற்றுகையிட்டனா். அதனைத் தொடா்ந்து, ஜூலை நடுப்பகுதியில் இலங்கை இராணுவப் பாதுகாப்புடன் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்.
0 Comments