Ticker

6/recent/ticker-posts

ரஞ்சனின் விடுதலைக்கு ரணில் முயற்சி?

சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆராயுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளா் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தாம் தற்போது பட்டப்படிப்புக்குத் தயாராகி வருவதாகவும், அதற்கென வழங்கப்பட்ட மடிக்கணினி சிறைச்சாலை அதிகாரிகளால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினியிலிருந்து  அழைப்புகளை மேற்கொள்வதாகக் கூறியே சிறைச்சாலை அதிகாரிகள் தமது மடிக்கணினியை எடுத்துச் சென்றதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதுடன், ரஞ்சன் ராமநாயக்கவின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து தருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments