அவிசாவளை, நாப்பாவளை பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றள்ளது.
பஸ் வண்டியின் சாரதியான சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முச்சக்கர வண்டி சாரதியான முஸ்லிம் ஒருவருக்கும் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த பகைமையே இந்த சம்பவத்திற்கு காரணமென்று அறிய வருகிறது.
பஸ் வண்டியின் சாரதியான சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முச்சக்கர வண்டி சாரதியான முஸ்லிம் ஒருவருக்கும் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த பகைமையே இந்த சம்பவத்திற்கு காரணமென்று அறிய வருகிறது.
ஏற்கனவே பகைமையை கொண்டிருந்த இருவருக்கும் இடையில் , இன்று காலை கைகலப்பு ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரின் சகோரதரர் என்றும் அறிய வருகிறது. தாக்குதலில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி அவிஸ்ஸாவலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை பஸ் வண்டியின் உரிமையாளர் மஹிந்தவின் மொட்டுக் கட்சியின் பிரதான அமைப்பாளர் என்றும் அறிய வருகிறது.
தனிப்பட்ட இருவரின் இந்த பிரச்சினையை இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சியில் குறித்த பொதுஜன பெரமுன மொட்டுக் கட்சி அமைப்பாளர் மேற்கொண்டதாகவும் அறிய வருகிறது.
தனிப்பட்ட இருவரின் இந்த பிரச்சினையை இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்றுவதற்கான முயற்சியில் குறித்த பொதுஜன பெரமுன மொட்டுக் கட்சி அமைப்பாளர் மேற்கொண்டதாகவும் அறிய வருகிறது.
நான்கு பஸ்களில் வந்த பெரும்பான்மை சமூகத்தவா்கள் வீதியில் வாகனங்கள் செல்லாதவாறு வீதியை மறித்து தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதியையும் அவரோடு இணைந்து பஸ் சாரதி மீது தாக்குதல் நடாத்தியர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலகத் தடுப்பு பொலிஸாரோடு உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களாக சந்தேகப்படும் சிலரை கைது செய்துள்ளனர்.
0 Comments