Ticker

6/recent/ticker-posts

வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார் ஞான­சாரர்

MFM.Fazeer
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய நேற்று அங்கு ஆஜ­ராவார் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் நேற்றும் அவர் ஆஜ­ரா­க­வில்லை. நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி குமு­தினி விக்­ர­ம­சிங்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன் போதே ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை என நீதி­மன்­றுக்கு அறி­வித்த அவ­ரது சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா, அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாகக் கூறி அறிக்கை ஒன்­றி­னையும் நீதி­ப­திக்கு கைய­ளித்தார். 
இத­னை­ய­டுத்து இது குறித்த வழக்கை எதிர்­வரும் ஜூன் 12 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­ட­துடன் அன்­றைய தினம் ஞான­சார தேரரை மன்றில் ஆஜ­ரா­கவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது, ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்­து­மீ­றி­யி­ருந்தார். இதன்போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரகீத் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இத­னை­விட அன்­றைய தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன் ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள்­நு­ழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார். இதனால் அன்­றைய தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து  நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான சந்­தியா எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரைக் கைது செய்­யு­மாறு ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இதன் போது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தவிர்க்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ஞான­சார தேரர் சார்பில் அடிப்­படை ஆட்­சே­ப­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்­தது. அதன்­படி குறித்த வழக்கை கடந்த மே 24 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

 அதன்­படி கடந்த மே 24 ஆம் திகதி சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந் நிலையில் நேற்று ஞான­சார தேரரை மன்றில் ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் மன்­றுக்கு சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. எனினும் ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­க­ளான மனோ­கர டி சில்வா, சட்­டத்­த­ரணி அனூஷா மன்றில் ஆஜ­ராகி ஞான­சார தேரர் சுக­யீ­ன­முற்­றுள்­ள­தா­கவும் அதனால் அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினர்.

இதன் போது குறுக்­கிட்ட அரச சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தில், கடந்த தவணையிலும் சந்தேக நபரான தேரர் மன்றில் ஆஜராகவில்லை என்பதையும் இந்த வழக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலமையிலான இருவர் கொன்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்ட வழக்கு என்பதையும் சுட்டிக்காட்டினார்.

 இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தது.
vidivelli.lk

Post a Comment

2 Comments

  1. Nice your post.
    You can find latest govt jobs in mp online recruitment visit here.

    ReplyDelete
  2. Thanks for sharing.
    You can find latest govt jobs and results in Rojgar Result click here.

    ReplyDelete