Ticker

6/recent/ticker-posts

சிங்கள இனவாதிகளின் அட்டகாசங்களுக்கு முன்னால் சட்டம் செயற்படுவதில்லை! முஸ்லிம் தரப்பினர் பிரதமரிடம் முறைப்பாடு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை (Advocacy & Reconciliation Council -  ARC) அமைப்பின் அங்கத்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஹலீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானும் கலந்து கொண்டுள்ளனர்.


தற்போது நாட்டில் எழுந்துள்ள கலவர சூழ்நிலை தொடர்பாகவும், நாளுக்கு நாள் எழுந்து வரும் சிங்கள இனவாத செயற்பாடுகள் தொடர்பாகவும், அதற்கெதிராக சட்டம் ஒழுங்காக  செயற்படாமல் இருக்கும்நிலை தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டதாகவும் அறிய வருகிறது.

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை செவிமடுத்த பிரதமர் உரிய நடவடிக்கைகைள மேற்கொள்வதற்கு  துறைசார்  அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

1 Comments