Ticker

6/recent/ticker-posts

வசீம் தாஜுடீனின் எலும்புகள் இரண்டு காணாமல் போயுள்ளன

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசீம் தாஜுடீனின் உடலில் இருந்த தொடை எலும்புகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ரகர் வீரரின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து அவரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்த மரணம் தொடர்பில் பல தகவல் வெளியாகியுள்ளன.

தாஜுடீனின் எலும்புகள் முதலாவது விசாரணையின் போது காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வசீம் தாஜுடீன் மரணத்தின் முக்கிய தகவல்களை வெளியாகுவதனை தடுப்பதற்கே உடலில் இருந்த தொடை எழும்புகள் களவாடப்பட்டிருக்கலாம் என விசாரணை குழுக்கள் தெரிவித்துள்ளது.
தொடை எலும்புகளுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அல்லது கூர்மையான ஆயுதங்களில் குத்தப்பட்டிருந்தால், அந்த தாக்குதல்களின் தடயங்கள் தொடை எலும்புகளில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தினால் இந்த எலும்புகள் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
முன்னாள் ரகர் வீரரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டவர் இராணுவத்தில் கேப்டன் பதவியில் இருந்த நபர் எனவும், அவர் கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பாதுகாப்பு குழுவில் செயற்பட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இதுவரையில் வடக்கில் இராணுவ முகாம் ஒன்றில் சேவை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் இந்த மர்மமான கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பிரிவு பிரதானி ஒருவர் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. tamil.srilankamirror.com

Post a Comment

0 Comments