Ticker

6/recent/ticker-posts

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆட்களை தேடுகிறது நாஸா!

விண்வெளியின் தொலைவிடப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்யவும் விண்வெளி வீரர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தேடி வருகின்றது.

இதற்காக அமெரிக்கக் குடியுரிமை பெற்ற விமானிகள் பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமிருந்தும் அந்த அமைப்பு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என நாஸா அறிவித்துள்ளது. விண்வெளிப் பயணத்துக்காகத் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் 2017-ஆம் ஆண்டு மத்தியில் அறிவிக்கப்படும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அவர்களது பணிக் காலத்தில் நான்கு முறை அமெரிக்க விண்வெளி ஓடங்களில் விண்வெளிக்கு அனுப்படுவர். விண்வெளியில் பயணிப்பதற்காக இதுவரை 300 பேரை நாஸா தேர்ந்தெடுத்துள்ளது. 

நாஸாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பொறியியல், உயிரியல், அறிவியல், இயற்பியல் ஆகிய ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments