பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு கொண்ட பிரான்ஸ் பிரஜை ஒருவரின் புகைப்படத்தை அந்த நாட்டின் காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
26 வயதான ஸலாஹ் அப்துஸ் ஸலாம் என்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏழு தீவிரவாதிகளால் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்குமதிகமானோர் பலியாகினர்.
300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பிரான்ஸின் வான் படையினர் சிரியா – ராக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை நேற்று இரவு முழுவதும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளே பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments